மலைகளின் இளவரசிக்கு, ஒரு மணி மகுடம்..
நாவின் உணர்வறிந்து,
நயமாக நீவீர் அளித்திடும் நளபாகமே, உந்தன் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்...
அறுசுவையோடு, அன்பும் சேர்த்து பரிமாறும் உணவிலே, வயிறோடு மனமும் குளிர்கிறது...
தோசையின் மொறுமொறுப்பும், மட்டன் சுக்காவின் கமகமப்பும், மள மளவென பரிமாறும் சுறுசுறுப்புமே,
உன் வளர்ச்சியின் சூட்சமம்...
உந்தன் சாம்பாரின் அறுசுவைக்கு,
அடிமை சாசனமே எழுதிடலாம்
அத்தனை ருசி .
ஆண்டவனின் அருளோடு ஆண்டு பல கடந்தும் உம் சேவை தொடர, வாழ்த்துகிறோம்💐
அன்புடன்,
உமாராணி கருணா மூர்த்தி,
இராமநாதபுரம்.
No comments:
Post a Comment