நிலவின் ஒளிக்கு வர்ணனை தேவையில்லை... இருப்பினும், கவிஞர்கள் வர்ணிப்பது இல்லையா???? அதுபோல இன்று நிலவென ஒளிரும் கவிதாவை வர்ணிக்கும் கவிஞராக உங்கள் முன் நான்...
கவிதா
இன்று என் கவிதையின் நாயகி...
இவ்வருட இன்னர் வீல் சங்க கதாநாயகி...
1988 ஆம் வருடம் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பிறந்த ராணி தேனீ இவர்....
அத்தனை சுறுசுறுப்பு இவரிடம்....
2008 அவள் மனதை கொள்ளை அடித்து,
Ramnad ல் குடி வைத்தது, அவர் கணவர் செந்தில்குமார் என்னும் ஆண் தேனீ...
பாரதியார் மீது பற்று, சற்று அதிகமானதாலோ என்னவோ,
தான் பெற்ற பெண்ணையே, பாரதியாக்கி பாலூட்டியவர்...
அடுத்ததாக Mr. சென் ஆசைக்கு இணங்கி, பிறந்தவர் தான் அர்ஜுன் சென்...
MBA மனித வளத்துறை படித்ததாக சொன்னார்கள்,
நான் நம்பவில்லை....
ஏனென்றால், அவர் மனித மனங்களை அல்லவா படித்தார்...
புத்தகம் படிப்பதும், பாடல் பாடுவதிலும், ரசனை மிக்கவர்....
தினசரி செந்தில் தூங்குவதே இவருடைய பாடல் கேட்டு தானமே... அப்படியா??
விழா முடியும் நேரம், நமக்காகவும் இருவரி பாடிக் காட்டுவார்...
Lovely friends குரூப்ல இணைந்து என் இருபது வயதை குறைத்து விட்ட குதூகுல
தாரகை....
இன்னர் வீல் சங்கத்தின் ஆபத்பாவன்...
இரண்டு முறை பிரசிடெண்ட்... இரண்டு முறை செக்ரட்டரி ...
ISO,
Treasurer என்று Inner wheel la அனைத்து பதவியிலும் கலக்கியவர்...
அனைவரையும் கட்டி வைக்கும் அன்பு கலந்த ஆளுமை...
இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்...
இவர் செக்கரட்டரி கிடைக்க, Inner wheel club உறுப்பினர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்...
வருடம் சிறக்க வாழ்த்துகள்..
வாழ்க வளமுடன்🙏
No comments:
Post a Comment