Tuesday, July 15, 2025

சிகரத்தில் சிதரம்.


அடி எடுத்து வைத்த நான், அசந்து விட்டேன்.. வந்தது கார்ல்டன் ஹோட்டலா, கந்தர்வ லோகமா?? அங்கொன்று இங்கொன்றுமாக, 

அழகிய ஆண், பெண் தேவதைகள்...


பணி மேவிய மலராய், மகிழ்வோடு மனமாய், தோழி ரம்யாவும், அவர் தம் நாயகனும் நயமாக வரவேற்று... 


நாவிற்கினிய உணவோடும், நல் ரோட்டரி உணர்வோடும் கற்றல் கருத்தரங்கம் கலை கட்டியது..


தோழி அணிவித்த ஏலக்காய் மாலையால், எதிர்மறை எண்ணம் எழுந்தோடிட, 

எம் மண்ணின் மைந்தர்கள் பேசிய உரையும், உண்மை கதையும் எம்மை உறைய வைத்தன.... 


வறுமையின் கொடுமையை, வாழ்வில் கற்றுக் கொடுத்த விதம் கேட்டு, உறைந்த 

என் உள்ளம், 

உருகி அழுதது...


பணியின் பொலிவோடும், இசையின் அதிர்வோடும், "இளமை திரும்புதே "

என தோழியரோடு குத்தாட்டம் போட்டு இரவினை கழித்தோம் இனிமையாக 🌜..


காலை புலர்ந்தது, கதிரவனோடு முதல்முறையாக செல்ஃபி🌞..


சுவைமிகு உணவு முடித்து, கலந்துரையாடல் 

தொடங்கிட, நிறைய கற்றுக்கொண்டோம்... 


இடையிடையே சிதரம் நாயகனும், அவர் தம் நாயகியும், 

ராஜ வலம் வந்தது சிறப்பு🤝. 


இறுதியில் என் நண்பரும் நல் அறுவடை நாயகனுமான,

 Mr. தினேஷ் பாபு பேசிய, மறுபிறவி நிகழ்வினை மனம் அதிர கேட்டு, 

மறு நொடி  நன்றியுரைத்தோம், இடியிலிருந்து காத்த இறைவனுக்கு🙏


கற்றல் நிகழ்விலும், கலந்துரையாடல் உரையிலும் கற்றுக்கொண்டோம்👍 


உன் அறுவடையில்  சிறு மழைத்துளியாய் இணைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


என்றும் உன் தோழி, உமாராணி கருணாமூர்த்தி

No comments: