Tuesday, July 15, 2025

செவிலியர் தின வாழ்த்துக்கள்

 தேவதைகள் 


என்னை பெற்றவளும் ஓர் தேவதை... போற்றி வளர்த்தவளும் ஒரு தேவதை... வாழ்வில் ஒளி ஏற்றியதும் ஒரு தேவதை... 


ஏன் இன்று உங்கள் முன் என்னை மேடையை ஏற்றியதும் ஒரு தேவதை👼... 

ஆம் என் தாயும் ஒரு செவிலியர் , என் சகோதரியும் ஒரு செவிலியர், 


தேவதைகளின் குடும்பத்தில் பிறந்து, இன்று செவிலியர்களின் சங்கமத்தில் இணைந்த நானும்,

ஒரு தேவதை தானே... 😇


எந்தன் பின்னால் ஒரு ஒளிவட்டம் தெரிகிறதா??? 

அது உங்கள் பிரகாசத்தில் எதிரொளியே....


சூரிய ஒளி வாங்கி ஒளிரும் நிலவின் பிரகாசம்... 


பிரம்மனின் படைப்பை, பூமியில் வரவேற்று காக்கும் விஷ்ணுவின் அவதாரம் நீங்கள்.... 


கொரோனாவின் கோர தாண்டவத்தில் அந்த கோவில் கருவறையில் அந்த கடவுளே கதவடைத்த வளை, வீதியில் களம் இறங்கி, அதனை விரட்டி அடித்த வீரமக்கள் நீங்கள்.... 


குடும்பத்தைக் கோவில் ஆக்கி, 

தன் குழந்தையோடு கணவனையும் கண்ணில் வைத்து காக்கும், கோவிலின் குலசாமியும் நீங்கள்.... 


பணம் காசினி தாண்டி, கருணை ஒன்றினை கையில் ஏந்தி, நோயோடு வருபவர்களின், 

உடல் பிணியோடு, மனபிணியையும் போக்கும், மகிஷாசுர வர்த்தினியும் நீங்கள்..... 


பிறர் தேவை அறிந்து சேவையாற்றும், செவிலியர் அனைவருக்கும், மக்களின் பிரதிநிதியான, என்னுடைய வாழ்த்துக்கள்💐 

         ✒️

உமாராணி கருணா மூர்த்தி

No comments: