Tuesday, July 15, 2025

என் தந்தை



தாயின் தயவால் நான் பெற்ற தனம்..

எண்ணிரண்டு வயதில், 

என் ஏட்டுக்கல்வி  முடிந்தாலும், எழுதும் ஆற்றலை, 

எம் மரபணுவில்  ஏற்றி, 

என் எழுத்தின் ஊன்றுகோல் ஆனவர்..


சூரியனைச் சுற்றும் கோள்கள் போல், 

எம் நால்வரையும் சுற்றிய சூரியன் அவர்...


பாசத்தின் குத்தகைக்காரர், 

பங்கீடு செய்ய தெரியாது, தன்னுள்ளே அடக்கியவர்..


இன்று இறைவனிடம் இணைந்து, எம் குலம் காக்கும் இறைவனும் ஆனவர்.

  🙏அப்பா🙏

            க. உமாராணி✒️

No comments: