
காலையில் கண்விழித்தேன்
கண் முன்னே கலர் கனவு
கவனத்தில் வந்தது
இன்று இளமை திருவிழா....
பத்து மணிக்கு மண்டபம் அடைந்தேன்
என் வயதில் 10 குறைந்தது,
பார்வையில் பட்ட
பாவையரின் கண்களில்
எந்தன் பாதியே தெரிந்தது...
பன்னிரண்டு மணித்துளியில்
கவிதை தேர்ந்தெடுக்கும்
கவிஞனானேன்,
கை கொட்டி கேலி செய்த
என் மனதை மறைத்து...
மதியம் செல்லச் செல்ல
மயில்களின் வண்ணத்தில்
மனம் உருகி,
உடன் உறைந்தது
உயிர் ஓவியத்தில்....
அந்தியில் ஓரு ஆதவனாய்
விஜய் ஆதி ராஜ் ஜின்
அசத்தல் வருகை,
அவர் கையால் கிடைத்தது
அழகிய சால்வை...
இரவு நெருங்கியது
கனவு மயங்கியது
நிகழ்வு நினைவில் வந்து
கடமை தொடங்கியது
மட்டில்லா மகிழ்வோடு
மறு விழாவை எதிர் பார்த்து.........
No comments:
Post a Comment