மண்ணோடு மணம் புரிந்தும்
விண்ணேடு கரம் சேர்க்கும்
முறையில்லா மரங்களுக்கு
பெயர் கூட தெரியவில்லை..

வெட்டி வைத்த
கேக் துண்டுகளாய்
வட்ட வட்ட
தேயிலைகள்....
அன்று
அண்ணாந்து பார்த்த
ஆகாய பறவை,
இன்று
என் அரையடி தொலைவில்..
ஆனந்த அதிர்வில்
அதனுள் அமர
சூரியகதிரோடு கைகோர்த்து
கடலை பார்த்து
கண் சிமிட்டியது..
மேகத்தை முத்தமிட்டே
மேல் நோக்கிச் செல்ல செல்ல
மேனியெல்லாம் சில்லிட
எட்டி பார்க்க எத்தனிக்கையில்
பூளோகமே ஒரு புள்ளியானது..
நாற்பது நிமிடம்
நானிலம் மறந்தேன்
நானென்பதும் மறந்தேன்
வின்னிலே மிதந்தேன்
இலங்கையை அடைந்தேன்...
மண்ணை
தொட்டன எம் கால்கள்
முத்தமிட்டன அவர் உதடுகள்..
பிறந்த மண்ணை
பிரிந்த துயரில்
இறுகிய அவர் இதயம்
இணைந்த மகிழ்வில்
இளகி கசிந்தது..
அழகிய வனம்
அதிலொரு பயணம்
அடர்ந்த காட்டுக்குள்
அசோக வனம்...
அழகின் உச்சமென
அதிலொரு குளம்
ஆற்றின் மறுபக்கம்
அனுமனின் பாதம்...
உள்ளம் களிகொள்ள
உலகம் மறந்தேன்
உறைந்திடும் பனி நீரில்
பாதம் நனைத்தேன்...
சுட்டது தண்ணீர்
சுருக்கென பட்டது மனதில்,
இது தண்ணீரல்ல
சீதை அழுத கண்ணீர்...
கண்ணனின் காதலி-என்
கண்களில் நீர் துளி,
காதலின் பிரிவெண்ணி
ஆற்றில் கலந்தது
மீண்டும் என் நீர் துளி.....